சமூக நீதியை காக்க கிராம உதவியாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்..

சமூக நீதியை காக்க கிராம உதவியாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்..
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்தில் பணி புரியும் கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி தன்னுடன் பணியாற்றும் கிராம உதவியாளரை
தன்னோடு சரிக்கு சரியாக அமர்ந்து வேலை பார்க்கக் கூடாது என்றும் அவரின் ஜாதி பெயரை சொல்லி கேவலமாக திட்டியும், தீண்ட தகாத வார்த்தைகளால் பேசியும், கிராம நிர்வாக அலுவலகத்தை பூட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். அதனைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பாக மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

✍️ சிறப்பு ஆசிரியர் கோபி குமார்
