Vijilence Network

Vijilence Tv

Vijilence Anandhan

About Vigilence Network

Vijilence Anadhan
Founder & CEO of Vijilence Network

நமது விஜிலென்ஸ் அரசியல் மற்றும் புலனாய்வு இதழின் நிறுவனர் / வெளியீட்டாளர் /ஆசிரியர் விஜிலென்ஸ் டாக்டர் D.ஆனந்தன் துரைராஜ் அவர்கள் ஆவார்.

இவர் திருச்சி மாவட்டத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முசிறி என்ற முசுகுந்தபுரத்தில் K.துரைராஜ் பண்டிதர் மற்றும் C. பேபி சரோஜா என்ற தம்பதியர்களுக்கு கடைக்குட்டி மகனாகப் பிறந்தவர். இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள்.  இவருடைய பெரிய அக்கா D. கிருஷ்ணகுமாரி சுகுமார், இளைய அக்கா D.சாந்தகுமாரி மணி. இவருடைய தந்தை தலைமை ஆசிரியராக இருந்தவர். தாய் ஆரம்ப நிலை ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்.

இவருக்கு இளம் வயதில் இருந்தே பத்திரிக்கை துறையில் பணிபுரிய வேண்டும் என்பதே மாபெரும் ஆசையாக இருந்தது. முசிறி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னுடைய பள்ளிக் கல்வியை முடித்தார். அதன் பின்னர் முசிறி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தன்னுடைய இளநிலைக் கல்விப் பட்டப்படிப்பை முடித்தார். தன்னுடைய கல்வி செலவுக்காக சின்ன சின்ன வேலைகளைச் செய்து (பேப்பர் போடுவது, பால் போடுவது…) அதில் வரும் வருமானத்தை வைத்து தன்னுடைய இளநிலை கல்வி மற்றும் முதுநிலை கல்வியை முடித்தார். முதுநிலைக்  கல்விகளை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். முதுநிலை கல்வி பயிலும் பொழுது இரண்டு முதுநிலை பட்டங்களையும் (M.A – Economics, M.A – Sociologist ) ஒன்றாக முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதுநிலை பட்டங்கள் படிக்கும் பொழுதே டிப்ளோமா அக்ரி கல்ச்சர்( Dip.Agri), ஹிந்தி சர்டிபிகேட் கோர்ஸ் (HCC), உயர் டிப்ளமோ மென்பொருள் பொறியாளர் (HDSE – Higher Diploma Software Engineer) போன்ற துணைக் கல்விகளையும் முடித்தார் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய இளம் வயதில் இருந்தே பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டும், நலிவடைந்த மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வளர்ந்தவர். அன்னை தெரேசா அவர்களின் வழியில் நடப்பவர்.

மக்கள் டிவி, தமிழ் ஓசை, தராசு பத்திரிகை, தங்கக் கழுகு போன்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
இவர் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி மக்கள் டிவியில் பணிபுரிகையில் தஞ்சை மாவட்டம் திருவையாற்றைச் சேர்ந்த புலவர் மு. பாலகிருட்டிணன் / சுசிலா
பாலகிருட்டிணன் ஆகியோரின் கடைமகள் பா.தமிழ் பாரதி என்பவரை மணந்தார். இவருடைய மனைவி இளங்கலை கணிதவியல் படித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன பின் தன் மனைவியை முதுநிலை மனித உரிமைகள் படிப்பை படிக்க வைத்து, அதே துறையில் முனைவர் பட்டமும் பெறச் செய்தார். அதோடு மட்டுமல்லாமல் கணிப்பொறி அறிவியலையும் பயிலச்செய்தார். ஆனந்தன் தமிழ் பாரதி தம்பதியர்களுக்கு ஒரு ஆண் மகன், ஒரு பெண் மகள் உள்ளனர். மகன் கிருஷ்ணன் ஆனந்தன் அவர்கள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்கள். துஜிதா ஆனந்தன் அவர்கள் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்கள்.

தன்னுடைய இத்தனை கால அனுபவத்தை வைத்து 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நமது விஜிலென்ஸ் அரசியல் மற்றும் புலனாய்வு இதழ் என்ற மாத இதழை அப்போதைய மீன்வளத் துறை அமைச்சர் K.A.ஜெயபால் அவர்களின் பொற்கரங்களால் கொண்டு வந்தார். அன்று முதல் இன்று வரை நமது விஜிலென்ஸ் இதழ் வெற்றி நடை போட்டு வருகிறது. “அஞ்சுவது யாதொன்றும் இல்லை ஆண்டவனைத் தவிர” என்ற தாரக மந்திரத்தோடு நமது விஜிலென்ஸ் இதழை விஜிலென்ஸ் DR.D.ஆனந்தன் துரைராஜ் அவர்கள் உயர்ந்த கொள்கையும், சமுதாய நோக்கமும், மனித நலனில் நாட்டமும், நாட்டு முன்னேற்றத்தில் மிகுந்த ஈடுபாடும், மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சிந்தனை போக்கும், புதியன படைக்கும் வேட்கையும், படைப்பு ஆற்றலும், பத்திரிகையில் பணியாற்றும் அனைவரையும் ஒருங்கிணைந்து செயல்படும் திறமை மிக்கவராகவும், பொறுப்புணர்வுடனும், மக்கள் நல நாட்டம் உள்ளவராகவும், மனிதநேயம் மிக்கவராகவும், மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விஷயங்களை உடனே தீர்மானிக்கும் கூர்மையான அறிவு படைத்தவராகவும், தனக்கு கீழ் பணிபுரியும் ஏனையோரிடம் சுமூகமான உறவு வைத்திருப்பதும், அதிகாரத்தை விட அன்பின் மூலம் பணிகளைச் சிறப்பாகச் செய்யும்படி அனைவரையும் பார்த்துக் கொள்வதும், எப்பொழுதும் மன உறுதியுடன் செயல்படுவதும், பொதுமக்களின் கருத்து, தலைவர்களின் கருத்து என்னவென்று ஆராய்ந்து அறிந்து செயல்படுவதும், எந்த சூழ்நிலையிலும் மனசாட்சிப்படி பணியாற்றுபவராகவும், உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, விடாமுயற்சி, எதற்கும் அஞ்சாமை என இப்படிப்பட்ட பல்வேறுபட்ட திறமைகளையும், கொள்கைகளையும் கொண்டு சிறப்பாக நமது விஜிலென்ஸ் இதழை நடத்தி வருகிறார் என்றால் அது மிகையல்ல..
அரசியல், கல்வி, சினிமா, விளையாட்டு, ஆன்மீகம், தொழில்நுட்பம், வர்த்தகம், மருத்துவம், வானிலை, உலகச் செய்திகள் என பல்வேறு பிரிவுகளையும் கொண்டு தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, புதுடெல்லி ஆகிய மாநிலங்களில் வெற்றி நடைப் போட்டு வருகிறது நமது விஜிலென்ஸ் இதழ்…
விஜிலென்ஸ் DR.D.ஆனந்தன் அவர்கள் நமது விஜிலென்ஸ் இதழைத் தொடர்ந்து விஜிலென்ஸ் டிவி என்ற இணையதள சேனலும் நடத்தி வருகிறார். விஜிலென்ஸ் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தையும் நடத்தி வருகிறார்.. மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பெற்றிடவும், மக்களுக்குச் சேவை ஆற்றிடவும், சேவையையே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கமே இந்த விஜிலென்ஸ் மக்கள் இயக்கம் ஆகும்.

Founder & CEO of Vijilence Network
Dr. Anandhan Durairaj and His Family

விஜிலென்ஸ் டாக்டர் D. ஆனந்தன் துரைராஜ் அவர்களின் பத்திரிக்கை பணியையும், மக்கள் பணியையும் பார்த்து பல்வேறுபட்ட அமைப்புகள் இயக்கங்கள் இவருக்கு பற்பல விருதுகளையும், பட்டங்களையும், சான்றிதழ்களையும் கொடுத்துள்ளார்கள்.. அம்பாசடர், நவீன பத்திரிகை உலகின் தந்தை, வித்தகன், சாதனைத் தமிழன், சேவா ரத்னா, சேவை செம்மல், சேவை இமயம், சேவை சிகரம், கலைத்திலகம், தங்கமகன், அன்னை தெரேசா விருது, அப்துல் கலாம் விருது, காமராசர் விருது, அம்பேத்கர் விருது, MGR விருது, ஸ்டாலின் விருது என பல்வேறுபட்ட விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சிறந்த பத்திரிக்கை ஆசிரியர் என்பதற்காக விருதும், இரண்டு முறை கௌரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது விஜிலென்ஸ் அரசியல் மற்றும் புலனாய்வு இதழ் ஏழாம் ஆண்டு, எட்டாம் ஆண்டு, ஒன்பதாம் ஆண்டு, பத்தாம் ஆண்டு என நான்கு ஆண்டுகளாக விஜிலென்ஸ் தொடக்க விழா மற்றும் சாதனையாளர்கள் விருது விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடத்தப்பட்டுள்ளது. ஏழாம் ஆண்டு விழா சேலம் மாவட்டத்தில்  அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகனைக் கொண்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. எட்டாம் ஆண்டு விழா புதுச்சேரியில் வாழும் காமராசர் புதுவையின் முதல்வர் N. ரங்கசாமி அப்பா அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது. ஒன்பதாம் ஆண்டு விழா தேனி மாவட்டத்தில் காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பிரபல சினிமா கலைஞர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. பத்தாம் ஆண்டு விழா புதுவையில் வாழும் காமராசர் புதுவையின் முதல்வர் N. ரங்கசாமி அப்பா அவர்கள் மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள் தலைமையில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. 

அதே போல் மகளிர் தினம் அன்று விஜிலென்ஸ் மகளிர் தின விழாவும் நடத்தப்பட்டுள்ளது. இவ்விழாவில் சாதனைப் புரிந்த மகளிர்க்கு விருதுகளும் வழங்கப்பட்டது.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் பல்வேறுபட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களைத் தேர்ந்தெடுத்து விஜிலென்ஸ் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அதேபோல் நலிவடைந்த மக்களுக்கு பல்வேறுபட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. பெண்களுக்கு இலவச தையல் மிஷின்களும், ஆண்களுக்கு இலவச இஸ்திரி பெட்டிகள், கை கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை கால்கள் வழங்கப் பட்டுள்ளது. டீ கடை பாய்லர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், உழைப்பால் உழைக்கத் துடிப்பவர்களுக்கு நான்கு சக்கர தள்ளுவண்டிகளும், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை அளித்தல், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குதல், திருநங்கைகளுக்கு உதவுதல், நலிவடைந்த குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு உண்டான மளிகை சாமான்கள் மற்றும் அரிசி மூட்டை வழங்குதல், நலிந்த பத்திரிகையாளர்களுக்கு உதவிகள், பெண்களுக்கு இலவச சேலைகள், பத்திரிகை நிருபர்களுக்கு ஹெல்மெட்டுகள், ரெயின் கோட்டுகள், டிராவல் பேக்குகள், மற்றும் இலவச மரக்கன்றுகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்கள்..