Vijilence Network

Vijilence News

கஞ்சா போதை பொருளைக் கைப் பற்றிய பழனி நகர காவல் துறையினர்..

கஞ்சா போதை பொருளைக் கைப் பற்றிய பழனி நகர காவல் துறையினர்..

கஞ்சா போதை பொருளைக் கைப்பற்றிய பழனி நகர காவல் துறையினர்..

பழனி வ.ஊ.சி பேருந்து நிலையத்தில் போதை பொருள் விற்பனையைத் தடுக்க பழனி நகர துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அறிவுறுத்தல்படி பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவல் உதவிஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர். தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது சந்தேகப்படும்படி இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரணைச் செய்ததில் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாபோதை பொருளைக் கைப்பற்றினர். மேலும் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் பழனி திருநகரைச் சேர்ந்த போலே உசேனின் மகன் முகமது பிதா வயது 24 என்பது தெரியவந்தது. மேலும் இவரிடமிருந்து இரண்டு செல்போன்கள், இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

✍️ பழனி பாலமுருகன்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *